0
கொரோனா வைரஸால் சர்வதேச அளவில் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகள் இந்த பாதிப்பிலிருந்து மீண்டுவர முடியாமல் தவித்து வருகின்றன. அந்தவகையில் பிரேசில் நாடு இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் ஆகும் என பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சனரோ ( Jair Bolsonaro ) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உரையாற்றும்போது அவர் கூறுகையில்:-
கொரோனா வைரஸின் உச்சக்கட்ட தாக்குதல் 3 அல்லது 4 மாதங்களில்தான் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். இதனால் 6 அல்லது 7 மாதங்களில் பிரேசில் நாடே இயல்பு நிலைக்கு திரும்பும்’ என்று கூறினார்.
பிரேசிலில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர் எண்ணிக்கை 11 ஆகவும், தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 957 பேராகவும் உள்ளது.
வணக்கம் லண்டனுக்காக
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்