கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்கும் சோதனைக்கு இப்போது பல நாட்கள் அவகாசம் தேவைப்படும் நிலையில், சுமார் 2½ மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்கும் விரைவான சோதனை முறையை உருவாக்கியுள்ளதாக உலகத் தரம் வாய்ந்த ஜேர்மனியின் மருத்துவ ஆய்வு நிறுவனமான போஷ் (Bosch) தெரிவித்துள்ளது.
இதற்காக Vivalytic molecular diagnostics platform என்ற சோதனை முறையை உருவாக்கியுள்ளதாக Bosch நிறுவனம் கூறியுள்ளது.
உலகளவில் கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொள்வதில் இந்த புதிய பரிசோதனை முறை உதவிகரமாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த பரிசோதனை முறை ஏற்கனவே நிமோனியா, இன்புளூவன்சா போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டாலும், இப்போது அது கொரோனாவை கண்டு பிடிக்கும் வகையில் புதிய மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
வணக்கம் லண்டனுக்காக
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்