Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் முல்லைத்தீவில் நாயால் வாக்குவாதம்; அடித்துக் கொல்லப்பட்ட இளைஞன்

முல்லைத்தீவில் நாயால் வாக்குவாதம்; அடித்துக் கொல்லப்பட்ட இளைஞன்

1 minutes read

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

குமுழமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரான இராசலிங்கம் ரமேஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்

நேற்றுமுன்தினம்(02.04.2020) முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் குறித்த இளைஞரது வீட்டுக்கு அயல் வீட்டில் இருந்து சென்ற நாய் ஒன்று அவர்களுடைய வீட்டில் இருந்த பொருட்களை திருடிச் சென்ற நிலையில் நாயை அந்த வீட்டில் வசித்த இளைஞன் கட்டி வைத்துள்ளார்.

இந்நிலையில் அயல் வீட்டவர்களும் நாயின் உரிமையாளர்களும் சென்று குறித்த இளைஞருடன் வாக்குவாதப்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் அது கைகலப்பாக மாறிய நிலையில் குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது

இந்நிலையில் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான இளைஞன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு(03.04.2020) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

இளைஞன் உயிரிழந்ததை தொடர்ந்து இன்றைய தினம் அந்தபகுதியில் உள்ள 3 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் முல்லைத்தீவு பொலிசாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More