ஏமனில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவரும் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பினார்.ஹட்ராமொண்ட் மாகாணம் அஷ் ஷஹூர் நகரை சேர்ந்த 60 வயது அரசு ஊழியர் ஒருவருக்கு கடந்த 10 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருடன் தொடர்பில் இருந்ததாக 120 பேர் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த அரசு அதிகாரி நேற்று குணமடைந்ததையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதன் மூலம் கொரோனா இல்லாத நாடாக ஏமன் மாறியுள்ளது.