சீனாவின் வூகான் பகுதியில் இருந்து உலகம் முழுவதும் பரவி அனைத்து நாடுகளையும் கதிகலங்க செய்து வருகிறது கொரோனா தொற்று நோய்.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொரோனா நோயால் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவதால் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் உலகில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 2 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதுதவிர்த்து, உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 20 லட்சத்து 80 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் மருத்துவமனைகளில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் இதுவரை 10 லட்சத்து 90 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் 51 ஆயிரம் பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 11 லட்சத்து 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் அமெரிக்காவில் பலியானோரின் எண்ணிக்கையும் 65 ஆயிரத்தை கடந்துள்ளது.
உலகில் அமெரிக்காவுக்கு அடுத்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக திகழும் ஸ்பெயின், இத்தாலி நாடுகளிலும் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல் ஸ்பெயின், இத்தாலி ஆகிய 2 நாடுகளிலும் கொரோனா பலி எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்துள்ளது.