Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தென்னாபிரிக்காவில் உணவுப் பொதிக்காக 4 கிலோ மீட்டர் தூரம் நின்ற மக்கள்!

தென்னாபிரிக்காவில் உணவுப் பொதிக்காக 4 கிலோ மீட்டர் தூரம் நின்ற மக்கள்!

1 minutes read

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 34 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ் வைரஸால் இதுவரை 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு பல்வேறு நாடுகளில் பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டு மக்கள் தங்கள் தொழில்களையும், வருமானத்தையும் இழந்துள்ளனர். இதனால் வறுமையின் காரணமாக போதிய உணவு கிடைக்காமல் பலர் உயிரிழக்கும் சூழலும் உருவாகியுள்ளது.

தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸின் பரவல் தீவிரமடைந்து வருவதால் March மாதம் 27ம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலர் வருமானம் இழந்து ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், தென்னாபிரிக்காவின் சென்சூரியன் ( Centurion ) நகரப் பகுதியில் உணவின்றி தவித்துவந்த மக்களுக்கு அரசாங்கத்தாலும் , சில தனியார் அமைப்புகளாலும் உணவுப் பொதி வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். இத் தகவலையடுத்து உணவு பொதிகளை வாங்க அப்பகுதியில் ஏராளமான மக்கள் குவிந்தனர்.

மக்கள் கூட்டம் கூட்டமாக அலை மோதியதால் அனைவரும் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகளும் திணறினார்கள்.

இந்நிகழ்வு வானிலிருந்து ட்ரோன் கமெரா மூலம் படமாக்கப்பட்டுள்ளது. மக்கள் உணவுக்காக நீண்ட வரிசையில் காத்துக்கிடந்த அவ் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-வணக்கம் லண்டனுக்காக ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More