ஆப்கானிஸ்தான், காபூல் நகரில் உள்ள ஒரு மருத்துவமனை மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துருக்கிறது.மேலும் பலி எண்ணிக்கை பற்றிய விபரங்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை தீவிரவாதத் தாக்குதலில் தாய்மார்கள், பிறந்த குழந்தைகள், செவிலியர்கள் என பல தரப்பினரும் கொல்லப்பட்திருக்கலாம்.
இதேபோல் தலைநகர் காபூலில் மகப்பேறு மருத்துவமனையில் புகுந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பிறந்த இரு சிசுக்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல் கிழக்கு நங்கஹார் மாகாணத்தில் இறுதிச்சடங்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
இதற்கு முதல் கடும் கண்டனத்தை இந்தியா தெரிவித்துள்ளமை குறிப்பிட்ட தக்கது.