நியூசிலாந்தில் தனிமைப்படுத்தல் முகாம்கள் நிரம்பியதால், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்நாட்டில் கடுமையான ஊரடங்கால் கொரோனா பரவல் முற்றிலும் அகற்றப்பட்டதாக கடந்த மாதம் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் அறிவித்தார். மேலும், கொரோனா பரவலை தடுக்க வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 28 இடங்களில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் முகாம்கள் நிரம்பியதால் வெளிநாடுகளில் இருந்து திரும்புவோருக்கான முன்பதிவை அடுத்த 3 வாரத்துக்கு ஏர் நியூசிலாந்து நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.