COVID-19 தொற்று பரவியதைத் தொடர்ந்து 2 மில்லியனுக்கும் அதிகமானோர் புகைப்பிடிப்பதை நிறுத்தியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 4 மாதங்களில் 41 வீதமானோர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டுள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் ஜூன் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு 10,000 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பிரித்தானிய பல்கலைக்கழகமொன்றினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
புகைப்பிடிப்பதால் கொரோனா தொற்று வேகமாகப் பரவும் அபாயமுள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பலர் புகைப்பிடிப்பதைக் கைவிட்டுள்ளதாக ஆய்வின் முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது.