Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று ஆரம்பம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று ஆரம்பம்

1 minutes read

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க  நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் கொடியேற்றதுடன் ஆரம்பமாகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த  திருவிழாவானது மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடனே நடைபெறுமென ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

மேலும் 25 நாட்கள் நடைபெறும்  குறித்த திருவிழாவில், 10 ஆம் நாளான ஓகஸ்ட் 3 ஆம் திகதி மஞ்சத் திருவிழாவும் ஓகஸ்ட் 12 ஆம் திகதி சூர்யோற்சவமும் கார்த்திகை உற்சவமும்  நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து 13 ஆம் திகதி கைலாச வாகனமும், மறுநாள் வெள்ளிக்கிழமை வேல் விமானத் திருவிழாவும், 16 ஆம் திகதி  சப்பைரதத் திருவிழாவும்  17 ஆம் திகதி தேர்த் திருவிழாவும் 18 ஆம் திகதி  தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த திருவிழாவில் பங்குகொள்வதற்காக வெளிநாடுகளிலுள்ள தமிழர்கள் அதிகளவானோர் வருகை தருகின்றமை வழமை. ஆனால் இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர்களின் பங்கேற்பு  இருக்காது என்றே கூறப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More