10
காற்றுக்குள் ‘புரவி’புகுந்துவிட்டது
உரு வந்தாடும் பெண்ணெனத்
தலைசுழற்றியாடுகின்றன தென்னைகள்
சிறு செடிகளோ காற்றிடம் சரணடைந்து
தரையில் தலைபதித்து மன்றாடுகின்றன
கூரையிலிருந்து கொட்டும் தண்ணீர்த்தாரைகள்
உருவாக்குகின்றன வீட்டைச் சுற்றிலும்
ஒரு நீரேரியை.
கிணறோவெனில்
இன்று நிறைவதா வேண்டாமா எனும்
குழப்பத்தில் முகம் இருண்டு தளம்புகிறது.
பெருமழையால் குளிர்ந்த கோபங்கள்
வெயிலேறும்போதில் மீளாதிருக்கட்டும்.
தமிழ்நதி