அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாநிலத்தில் தைமாதத்தில் தமிழ்மரபு திங்கள் தினம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
அம் மாநில ஆளுனர் ரோய் கூப்பர் (Roy Cooper) கையெழுத்திட்டு இந்த அறிவிப்பை அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
உலகமெங்கும் தமிழ் திங்கள மரபு பிரகடனம் செய்யப்பட்டு வரும் நிலையில் புலம்பெயர் தமிழ் மக்களின் பங்களிப்பில் தமிழ்மொழி மற்றும் பண்பாட்டுக்கு அங்கீகாரம் பெருகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு உலகத் தமிழ் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.