சீனா 3 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக வெளிநாட்டு பயணிகளுக்கு அதன் எல்லையை திறந்துவிட்டிருக்கிறது.
நாளை முதல் வெளிநாட்டினருக்கான எல்லாவிதமான விசாக்களும் மீண்டும் வழங்கப்படும் என்று சீன வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
கொவிட்19 நோய்ப் பரவலுக்கு முன்பு சீனாவில் விசா தேவைப்படாத பகுதிகளுக்கு இப்போது மீண்டும் விசா இன்றிச் செல்லலாம் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஆசிய நாடுகள் உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு விசா தேவையில்லை என்ற நிலையை தற்போது சீனா மேலும் விரிவுபடுத்தியதையடுத்து, புதிதாக நாற்பது நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, 60 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு சீனா செல்ல விசா தேவையில்லை.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக முடங்கிக் கிடந்த சீனாவின் பொருளாதாரத்தை முடுக்கிவிடும் முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகின்றது.