Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வீரசேகரவின் உரைக்கு எதிராகக் கல்முனை சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பு!

வீரசேகரவின் உரைக்கு எதிராகக் கல்முனை சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பு!

2 minutes read

நீதிமன்றப் பணிப்புறக்கணிப்பில் கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் இன்று ஈடுபட்டது.

அம்பாறை மாவட்டம், கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி தலைமையில் ஒன்றுகூடிய சட்டத்தரணிகள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அத்துடன் பல்வேறு வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள பௌத்த கட்டுமானங்களைப் பார்வையிட முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா அண்மையில் சென்றிருந்தார். அப்போது தனது குழுவினருடன் அங்கு வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, தேவையில்லாமல் மூக்கை நுழைத்து வாங்கிக் கட்டினார். அரசியல்வாதிகள் நீதிமன்ற விசாரணையில் மூக்கை நுழைக்கக்கூடாது என எச்சரித்து வீரசேகரவை அங்கிருந்து நீதிபதி அகற்றியிருந்தார்.

இதனால் கொதிப்படைந்த வீரசேகர அண்மையில் நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி, தமிழ் நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசியிருந்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளையும் கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் இன்று புறக்கணித்திருந்தது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More