December 7, 2023 9:31 am

1200 அடி உயரத்தில் ஊசலாடிய குழந்தைகள் உள்பட 8 பேர் மீட்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா பிராந்தியத்தில், அந்தரத்தில் கேபிள் கார் எனப்படும் ஒரு கயிறின் மூலமாக இயக்கப்படும் சிறு வாகனத்தில் அமர்ந்து மலைகளுக்கு இடையில் மக்கள் பயணம் செய்கின்றனர்.

குழந்தைகள் பாடசாலைக்கு செல்ல கேபிள் கார் மூலமாக ஒரு மலைப்பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்வது வழக்கம்.

அந்த வகையில், நேற்று காலை 7 மணியளவில் 6 குழந்தைகள், 2 பெரியவர்கள் என மொத்தம் 8 பேர் ஒரு கேபிள் காரில் பயணம் செய்தனர்.

தரையில் இருந்து சுமார் 1,200 அடிக்கு மேலே அது செல்லும்போது கயிறு திடீரென அறுந்தது. இதனால் அந்த கேபிள் கார் பயணிகளுடன் அந்தரத்தில் ஊசலாட தொடங்கியது.

இந்நிலையில், 14 மணி நேரத்துக்குப் பிறகு குழந்தைகள் உள்பட 8 பேரும் மீட்புக் குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர் என தற்காலிக பிரதமர் அன்வர் உல் ஹக் ககர் தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்