December 7, 2023 1:19 am

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லையாம்! – அலி சப்ரி கூறுகின்றார்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்று கனடா கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான விடயமாகும் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையைப் போன்றே தற்போது எந்தவித ஆதாரமும் இன்றி சில குற்றச்சாட்டுக்களை இந்தியா மீதும் கனடா முன்வைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியாவில், கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியத் தூதரக அதிகாரிகள் தொடர்புபட்டுள்ளனர் என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதையடுத்து, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், கனடாவின் குற்றச்சாட்டு தொடர்பில் இந்திய ஊடகமொன்றுக்குக் கருத்துரைத்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கனடா எந்தவிதமான ஆதாரங்களும் இன்றி இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“பயங்கரவாதிகள் சிலர் கனடாவில் பாதுகாப்பான புகலிடத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தநிலையில், கனேடியப்  பிரதமர் இந்தியாவுக்கு எதிராக எந்தவித ஆதாரமும் இன்றி சில மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். இலங்கைக்கும் கனடா இதே விடயத்தையே செய்தது. இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்று கனடா கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விடயமாகும். இலங்கையில் ஒருபோதும் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்தநிலையில், கனேடியப் பிரதமர் ஆதாரம் எதுவுமின்றி இந்தியாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.” – என்றார்.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்