அமெரிக்காவில் கொள்ளையடித்த கடையில் விட்டுச்சென்ற அலைபேசியைத் திரும்பிப் பெறச் சென்ற ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விநோத சம்பவம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நடந்துள்ளது.
அந்தப் பெண், நக அலங்காரக் கடையிலிருந்து 600 டொலர் மதிப்புள்ள பொருள்களைத் திருடிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
எனினும், சிறிது நேரத்தில், தம்முடைய iPhone-ஐ கடையிலேயே விட்டுச் சென்றது அவருக்கு நினைவுவந்தது. அதைப் பெற, அவர் மீண்டும் கடைக்குச் சென்றார்.
அலைபேசியோடு அவருடைய கடன் அட்டையும் ஓட்டுநர் உரிமமும் இருந்துள்ளன.
கடை உரிமையாளர் அவற்றைக் கொடுக்க மறுத்தபோது அந்தப் பெண் அவரைத் தூக்கித் தரையில் வீசியதுடன், கடையில் வேலை செய்துகொண்டிருந்த கர்ப்பிணி ஒருவரையும் அவர் தாக்கியுள்ளார்.