அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் ஏற்பட்ட தீ, கடும் காற்று காரணமாக மளமளவென பரவியுள்ளது.
இதனால், கடந்த 24 மணி நேரத்தில் 42 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
ஒரே இரவில் 3 மடங்கு வேகமாக தீ பரவத்தொடங்கியதால் அருகாமையில் வசித்த நபர்களை வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
650 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர்.
இதேவேளை, குறித்த பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் தீ பரவலை கட்டுப்படுத்த உதவும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.