துருக்கி நாடாளுமன்றம் அருகே நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் தொடர்பில் 90 பேரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்தனர்.
தற்கொலை தாக்குதலுக்கு குர்து இன போராளிகள் பொறுப்பேற்ற அடுத்த சில மணி நேரத்தில் அவர்களுடன் தொடர்பு வைத்திருந்தத குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இஸ்தான்புல் உள்பட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய சோதனை நடத்திய பாதுகாப்பு படையினர் இவர்களை கைதுசெய்தனர்.
அத்துடன், குர்து போராளிகளுக்கு பதிலடி தரும் விதமாக ஈராக்கில் உள்ள அவர்களது நிலைகள் மீது துருக்கி இராணுவம் வான் தாக்குதல் நடத்தியுள்ளது.