செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா குஜராத் தீ விபத்தில் 28 பேர் பலி; 3 பேர் கைது

குஜராத் தீ விபத்தில் 28 பேர் பலி; 3 பேர் கைது

0 minutes read

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு வளாகத்தில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியாகி உள்ளனர்.

இதனையடுத்து, விளையாட்டு திடல் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 இலட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என மாநில முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த தீ விபத்து நடந்த விளையாட்டு வளாகம், அரசின் தீயணைப்பு அனுமதிக்கான தடையில்லா சான்று பெறாமலேயே இயங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாநகராட்சி, தீயணைப்புத்துறை ஆகியவற்றிடம் இருந்து தேவையான எந்த அனுமதியும் விளையாட்டு திடல் உரிமையாளர் பெறவில்லை என்றும், ஒரே ஒரு அவசர வழி மட்டுமே இருந்துள்ளதாகவும் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More