Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home ஆன்மிகம் ஓஷோவின் அனுபவ வரிகள்

ஓஷோவின் அனுபவ வரிகள்

1 minutes read

ஓஷோவின் அனுபவ வரிகள் :

மௌனமாக எதிர்கொள் வியாக்கியானம் எதுவும் செய்யாமல் கண்ணாடி வெறுமனே பிரதிபலிப்பது போல பிறகு அதன் உண்மையான பொருள் புரியும் .

என் பகவான் நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என ஒருவர் ஓஷோவிடம் கேட்ட போது அவர் சொன்ன பதில் இந்த கேடு கேட்ட உலகத்தில் என் குழந்தை வாழ்வதை பார்க்க பிடிக்கவில்லை

ஒரு எல்லையை கடந்த பின் மனிதன் அனைத்தையும் விட்டு விடுகின்றான். குறை சொல்வது வேண்டுகோள் வைப்பது , சமாதானம் செய்வது அனைத்தையும் அவன் இதயம் யார் பேசினாலும் யார் பேசவில்லை என்றாலும் சரி என்ற நிலையை அடைகிறது. ஏனெனில் புரிந்து விடுகிறது . இந்த உலகம் பொய்ப்பிற்கானது. காரண காரியங்கள் நிறைந்தது என்று

புறவுலகில் வாழ்வதற்கான கருவிதான் அறிவு அது உள்ளூர வாழாத்  தேவையில்லை புத்தியையும் கையோடு கூட்டிக் கொண்டே நீங்கள் கிளம்பினாள் உங்களால் உள்ளூர் இறங்க முடியாது புத்தியின் துணைகொண்டு உங்களால் புறஉலகில் நுழையக்கூட அமைதி கிடைக்காது .

மனிதனைத் தவிர இயற்கையின் மற்ற படைப்புகள் பொருளாதார நிபுணர்களை நம்பி வாழவில்லை  இந்த கணம் தான் உண்மை மற்றவை அனைத்தும் நினைவுகளுக்கும் கற்பனையும் தான்

நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது  ஒரு மருத்துவரை  அழைக்கவும் ஆனால் மிக முக்கியமாக உன்னை நேசிப்பவர்களை அழைக்கவும் ,ஏனென்றால்  அன்பை விட  முக்கியமானது  என்று  எதுவும் இல்லை.

மற்றவர்களைபற்றி சிந்திக்காதீர்கள் முதலில் உங்களது பிரச்சனைகளை தீர்க்கப்பாருங்கள் அதன் பிறகு மற்றவர்களுக்கும் கூட உதவுவதற்காக தெளிவு உங்களுக்கு கிடைக்கும்.

ஒவ்வொரு நாளிலும் நீங்கள் கொண்டாட்டமாக இருப்பது என்பதே நீங்கள் கற்க வேண்டிய முதல் பாடம் நாம் அனைவரும் அன்பை பெற விரும்புவதால் யாருக்கும் கொடுக்கத் தெரிவதில்லை .

மரணம் என்பது இரு உயிர்களுக்கு இடையேயான கதவு ஒன்று பின்தங்கியிருக்கிறது.ஒருவர் முன்னால்  காத்திருக்கிறார்.

உங்கள் ஆற்றல் கொண்டு நல்லவராக இருங்கள் உங்கள் பலவீனத்தால் நல்லவராக வேண்டாம் தீயவராகுங்கள் என்று நான் சொல்ல வரவில்லை பலவீனமாக இருக்கும் போது நீங்கள் எதுவாகவும் மாற முடியாது.

வெளியில் யாராவது உங்கள் உள் உருவத்துடன் பொருந்தினால் நீங்கள் காதலிக்கின்றீர்கள் அதுதான் அன்பின் அர்த்தம்

திரை காலியாக உள்ளது ஓய்வெடுங்கள் கண்களை மூடிக்கொண்டு திரையில் ஒரு திரைப்படத்தை பார்ப்பது போல்  உங்கள் எண்ணங்களை பாருங்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More