Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு 12 மணி நேரத்தில் இரண்டு நாடுகளில் விளையாடிய மலிங்கா

12 மணி நேரத்தில் இரண்டு நாடுகளில் விளையாடிய மலிங்கா

1 minutes read

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி வரை சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 3 விக்கெட் கைப்பற்றினார்.

இந்த ஆட்டம் முடிந்ததும் உடனடியாக தனது தாயகமான இலங்கைக்கு விமானம் மூலம் திரும்பினார். அங்கு சென்றதும் சூட்டோடு சூடாக நேற்று காலை பல்லேகெலாவில் நடந்த உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்கேற்றார்.

காலே – கண்டி அணிகள் இடையிலான இந்த ஆட்டத்தில் காலே அணிக்கு மலிங்கா கேப்டனாக பணியாற்றினார். இதில் முதலில் பேட்டிங் செய்து காலே அணி நிர்ணயித்த 256 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய கண்டி அணி 18.5 ஓவர்களில் 99 ரன்னில் சுருண்டு தோல்வி அடைந்தது.

காலே கேப்டன் மகிங்கா 9.5 ஓவர்கள் பந்து வீசி 49 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை அள்ளினார். 12 மணிநேர இடைவெளியில் இரண்டு நாட்டில் நடந்த போட்டியில் காலம் கனடா மலிங்கா மொத்தம் 10 விக்கெட்டுகளைச் சாய்த்து வியக்க வைத்தார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More