சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், நடப்பு ஐ.பி.எல். ரி-20 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தனது தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த முடிவினை எடுத்துள்ளதாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா, நடப்பு தொடரிலிருந்து விலகிய நிலையில் தற்போது இரண்டாவது வீரராக ஹர்பஜன் சிங் விலகியுள்ளார்.
கடந்த வாரம், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் 13பேர் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தனர்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 13ஆவது அத்தியாத்தம், எதிர்வரும் 19ஆம் திகதி முதல் நவம்பர் 10ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில், அபுதாபி, ஷார்ஜா மற்றும் டுபாய் ஆகிய மூன்று இடங்களில் நடைபெறவுள்ளது.