Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கொல்கத்தா அணியின் புதிய தலைவரானார் ஓய்ன் மோர்கன்!

கொல்கத்தா அணியின் புதிய தலைவரானார் ஓய்ன் மோர்கன்!

1 minutes read

ஐ.பி.எல். ரி-20 தொடரில் விளையாடும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக், தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

தனது துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்துவதற்கும் அதிக பங்களிப்பு செய்வதற்குமாக இந்த முடிவினை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

இதனால், 50ஓவர்கள் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஓய்ன் மோர்கன் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

இதுகுறித்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கி மைசூர் கூறுகையில், “அணியை எப்போதும் முதலிடம் வகிக்கும் தினேஷ் கார்த்திக் போன்ற தலைவர்களைக் கொண்டிருப்பது எங்களது அதிர்ஷ்டம்.

அவரைப் போன்ற ஒருவர் இது போன்ற ஒரு முடிவை எடுக்க நிறைய தைரியம் தேவை. அவருடைய முடிவால் நாங்கள் ஆச்சரியப்பட்டாலும், அவருடைய விருப்பங்களை நாங்கள் மதிக்கிறோம்” என கூறினார்.

கார்த்திக் தலைமையின் கீழ், கே.கே.ஆர் இதுவரை 13ஆவது பதிப்பில் ஏழு போட்டிகளில் நான்கில் வென்றது மற்றும் புள்ளிகள் அட்டவணையில் நான்காவது இடத்தில் உள்ளது.

இருப்பினும், கார்த்திக் துடுப்பாட்டத்தில் பெரிதும் சோபிக்கவில்லை. அவர் இதுவரை 108 ஓட்டங்களை பெற்றுள்ளார். சராசரி 15.42ஆகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More