இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள தென்னாபிரிக்க அணியில் இடம்பெற்றிருந்த இருவீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான வீரர்கள் இருவரும் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் தென்னாபிரிக்க அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்கள் யாரும் தொற்றுக்குள்ளான வீரர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவில்லை என, அந்நாட்டு கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை அணி நேற்று தென்னாபிரிக்காவுக்கு பயணமானமை குறிப்பிடத்தக்கது.