பங்களாதேஷ் அணிக்கு நல்ல பாடம் கற்பித்த இலங்கை துடுப்பாட வீரர்கள் இலக்கை துரத்தும்போது, 7 பந்துகள் மீதமிருந்த நிலையில் 172 என்ற இலக்கை விரட்டினர்.
பங்களாதேஷுக்கு எதிரான டி-20 உலகக் கிண்ண போட்டியில் இதுவரை தோல்வியை சந்திக்காத இலங்கை அணி, நேற்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று 100 சதவீதத்தை தக்க வைத்துள்ளது.
நேற்யை தினம் தனது 5 ஆவது டி-20 போட்டியில் விளையாடிய அசலங்க, தனது முதல் அரை சதம் அடித்து பங்களாதேஷுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறினார்.
இந்த இன்னிங்ஸிற்காக அசலங்க ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
குசல் பெரேரா ஆட்டமிழந்ததால் முதல் ஓவரில் பேட்டிங் செய்ய வந்த 24 வயதான இடது கை ஆட்டக்காரரான அசலங்க, இரண்டாவது ஓவரில் ஹசனின் நான்காவது பந்தில் பவுண்டரி அடித்து இன்னிங்ஸைத் தொடங்கினார்.
அதன் பின்னர் அவரின் தொடர்ச்சியான அதிரடிகளின் விளைவாக பவர் – ப்ளேயில் 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 54 ஓட்டங்களை எடுத்தது இலங்கை.
8.1 ஆவது ஓவரில் பதும் நிஷாங்க 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்தடுத்து வந்த அவிஷ்க பெர்னாண்டோ டக்கவுட்டுடனும், வனிந்து ஹசரங்க 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
இதனால் 79 ஓட்டங்களுக்கு இலங்கையின் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டது. அதன் பின்னர் பானுக ராஜபக்ஷ களமிறங்கினார்.
அசலங்காவின் வேகமான இன்னிங்ஸால் அதிரடியை ஆரம்பிக்காத பானுக முதல் 9 பந்துகளில் 6 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தார்.
தொடர்ந்து பானுகாவின் முதல் சிக்ஸர் அஃபிஃப் ஹொசைனின் சுழற்பந்து பந்தில் பெறப்பட்டது, அதையடுத்து இலங்கையின் அதிரடி ஆட்டம் சார்ஜாவில் நிலை கொண்டது.
இலங்கைக்கு கடைசி 8 ஓவர்களில் 82 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், அசலங்கா மற்றும் பானுகா மஹ்முதுல்லா வீசிய 14 ஆவது ஓவரில் 16 ஓட்டங்களையும், சஃபுதீன் வீசிய 16 ஆவது ஓவரில் 22 ஓட்டங்களையும் பெற்று நெருக்கடியிலிருந்து விடுபட்டனர்.
பானுகாவின் பெயருக்கு முன்னதாக 53 ரன்கள் இன்னிங்ஸில், அவர் 31 பந்துகளை எதிர்கொண்டார், மூன்று சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடித்தார்.
வெற்றியின் தருவாயில் தனது 30 ஆவது பிறந்த தினத்தை அரை சதத்தை குவித்த பானுக மொத்தமாக 31 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழந்தார்.
இறுதியாக அணித் தலைவர் தசூன் சானக்க களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க 18.5 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் மேலும் ஒரு பவுண்டரியுடன் வெற்றியை பறை சாற்றினார் அசலங்க.
இறுதிவரை ஆட்டமிழக்காதிருந்த அவர் 49 பந்துகளில் 80 ஓட்டங்களை குவித்தார்.
போட்டியின் சிறம்பம்சங்கள்
துஷ்மந்த சமீர ஒரு மணி நேரத்திற்கு 150 கி.மீ வேகத்தில் பந்துப் பறிமாற்றம் மேற்கொண்டமை ஒரு சிறப்பான விடயமாகும்.
இன்னிங்ஸின் தொடக்கத்தில் லிட்டன் தாஸை எதிர்த்த லஹிரு குமாரவின் திறமை மைதானத்தில் சற்று சூடுபிடித்தது. ஆனால் வீரர்களின் தலையீட்டினால் அது சரி செய்யப்பட்டது, லஹிருவின் பந்து வீச்சில் தாஸ் விக்கெட்டை இழந்தார்.
நான்கு முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் இலங்கை இன்னிங்ஸ் நுழைந்ததால் மகேஷ் தீக்ஷனாவுக்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது.
தீக்ஷனாவுக்கு பதிலாக பினுரா பெர்னாண்டோ உள்ளீர்க்கப்பட்டார்.