நோவக் ஜோகோவிச்சின் விசாவை இரண்டாவது முறையாகவும் இரத்து செய்யும் அவுஸ்திரேலிய அரசங்கத்தின் முடிவினை பெடரல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இதனால் டென்னிஸ் உலகின் நம்பர் வன் வீரரான நோவக் ஜோகோவிச் விரைவில் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளதுடன், ஆஸி. ஓபனில் பங்கெடுக்கும் வாய்ப்பும் இல்லாமல் போயுள்ளது.
முன்னதாக அவுஸ்திரேலிய ஓபன் முதல் சுற்றுப் போட்டிகளுக்கான அட்டவணையில் சேர்பியன் வீரர் நோவக் ஜோகோவிச்சும் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.