Monday, May 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே புதுப்பித்தார்

மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே புதுப்பித்தார்

1 minutes read

ஜேர்மனியில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற பி எம் டபிள்யூ பேர்லின் மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள், 01 நிமிடம் 09 செக்கன்களில் நிறைவு செய்த கென்ய வீரர் எலியுட் கிப்சோகே தனது முன்னைய உலக சாதனையை 30 செக்கன்களால் முறியடித்தார்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் பேர்லின் நிலைநாட்டிய 2 மணி. 01 நி. 09 செக்கன்கள் என்ற தனது சொந்த சாதனையையே கிப்சோகே முறியடித்துள்ளார்.

இந்த வெற்றியுடன் இதுவரை அவர் பங்குபற்றிய 17 மரதன் போட்டிகளில் 15 வெற்றிகளை ஈட்டியுள்ளார்.

மரதன் ஓட்டப் போட்டியின் சரி அரைவாசி தூரத்தை 59.51 செக்கன்களில் கிப்சோகே பூர்த்தி செய்ததால் முழு மரதன் தூரத்தை முதலாவது நபராக 2 மணித்தியாலங்களுக்குள் நிறைவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவரால் அதனை ஒரு நிமிடம் 10 செக்கன்களால் நிறைவேற்ற முடியாமல் போனது.

அப் போட்டியில் கிப்சோகேயின் சக நாட்டவரான மார்க் கோரிர் (2:05:58) இரண்டாம் இடத்தையும் எதியோப்பிய வீரர் டாடு அபேட் (2:06:28) மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

இதேவேளை, பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் எதியோப்பிய வீராங்கனை டிகிஸ்ட் அசேபா (2:15:37) தனது சொந்த நாட்டுக்கான தேசிய சாதனையுடன் முதலாம் இடத்தைப் பெற்றார். போட்டி நடைபெற்ற இடத்துக்கான புதிய சாதனையை நிலைநாட்டிய டிகிஸ்ட் அசேபா, வரலாற்றில் 3ஆவது வேகமான நேரத்தைப் பதிவுசெய்தார்.

பெண்கள் பிரிவில் கென்யாவின் உலக சாதனை வீராங்கனை ப்றிகிட் கொஸ்கேய் (2:14:04) இரண்டாம் இடத்தையும் பிரித்தானிய வீராங்கனை பாவ்லா ரெட்க்ளிவ் (2:15:25) மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More