லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) தொடரின் கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக கண்டு களிப்பதற்கான வாய்ப்பை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்கியுள்ளது.
அதன்படி இன்று நடைபெறுகின்ற இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முதலாவது அணிக்கான போட்டி, வெளியேறும் அணிக்கான போட்டி மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இரண்டாவது அணிக்கான போட்டிகளை இலவசமாக பார்வையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டிகள் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாளை வியாழக்கிழமை ( 22) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.