சீனா உருவாக்கிய கொரோனா தடுப்பூசிகளை தன்னார்வலர்களுக்கு செலுத்தும் சோதனை பிரேஸிலில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் சினோவாக் நிறுவனம் உருவாக்கியுள்ள ‘கொரோனாவாக்’ என்ற தடுப்பூசி சீனாவில் மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், அந்த தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு பக்க விளைவுகள் தென்பட்டதால், அது தொடர்பாக விசாரணை முடிவடையும் வரை சோதனையை நிறுத்திவைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
தடுப்பூசி சோதனைகளின்போது, பக்க விளைவுகள் காரணமாக அந்த முயற்சி நிறுத்திவைக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றும் கூறப்படுகிறது.
சீனத் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ ஏற்கெனவே சந்தேகம் எழுப்பியது நினைவு கூரத்தக்கது.