Thursday, May 2, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிக்கு பிரித்தானியா அனுமதி

ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிக்கு பிரித்தானியா அனுமதி

2 minutes read

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியை உபயோகப்படுத்த பிரித்தானியா அனுமதியளித்துள்ளது.

இது ஒரு முக்கிய திருப்புமுனையைக் குறிப்பதோடு, பிரித்தானியாவின் நோய்த்தடுப்பு பிரச்சாரத்தில் பாரிய விரிவாக்கத்திற்கு வழிவகுக்கும். அத்தோடு மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அஸ்ட்ராஜெனெகாவிடமிருந்து 5 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு போதுமான10 கோடி தடுப்பூசிகளை வாங்குவதற்கு பிரித்தானியா முன்பதிவு செய்துள்ளது.

மருந்து கட்டுப்பாட்டாளரின் ஒப்புதல், தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பதை உணர்த்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி இவ்வாண்டின் முதல் மாதங்களில் உருவாக்கப்பட்டு ஏப்ரல் மாதத்தில் முதல் தன்னார்வலரிடம் பரிசோதிக்கப்பட்டது, பின்னர் ஆயிரக்கணக்கான மக்களிடம் பெரிய அளவிலான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இது தொற்றுநோய்க்கு முன் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி டிசம்பரில் மக்களுக்கு வழங்கப்பட்ட பின்னர் பிரித்தானியாவால்  அங்கீகரிக்கப்பட்ட இரண்டாவது கொரோனா தடுப்பூசி இதுவாகும்.

ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி உபயோகப்படுத்த குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுக்கும் வழிவகுக்கும், ஏனெனில் இது மலிவானது மற்றும் வெகுஜன உற்பத்திக்கு எளிதானது.

முக்கியமாக இது ஒரு நிலையான குளிர்சாதன பெட்டியில் சேமிக்க முடியும். அதாவது பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை கடும் குளிர் (70 டிகிரி) நிலையில் சேமித்து வைப்பது போலல்லாமல். எனவே ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியை வீடுகள் மற்றும் பொது நடைமுறை அறுவை சிகிச்சைகளில் (GP surgeries) சேமித்து வைக்கலாம்.

முதியவர்கள், முதியோர் இல்ல பராமரிப்பாளர்கள் மற்றும் சுகாதார மற்றும் பராமரிப்பு தொழிலாளர்கள் உட்பட ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளநோய்த்தடுப்புக்கான முன்னுரிமை குழுக்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

நாடு “முன்னோடியில்லாத வகையில்” தொற்றுநோய்களை எதிர்கொண்டு வருவதாக இங்கிலாந்து பொது சுகாதார அதிகாரிகள் கூறியதையடுத்தும் மற்றும் வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் தெற்கில் உள்ள சுகாதார அதிகாரிகள் வைத்தியசாலைகளில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளர்கள் குறித்து கவலை தெரிவித்ததையடுத்தும் புதிய தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More