Tuesday, May 21, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் மலேசியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தோனேசிய தொழிலாளர்கள்

மலேசியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தோனேசிய தொழிலாளர்கள்

1 minutes read

மலேசியாவில் பாதிக்கப்படக்கூடியவர்களாக அடையாளப்படுத்தப்பட்ட 145 இந்தோனேசிய புலம்பெயர் தொழிலாளர்கள் இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர். 

கொரோனா கால சுகாதார கட்டுப்பாடுகள் அடிப்படையில், இந்த திருப்பி அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் Tangerang-ல் உள்ள Soekarno-Hatta விமான நிலையத்தை சென்றடைந்த தொழிலாளர்கள் ஜகார்த்தாவில் உள்ள Wisma Atlet கொரோனா அவசர மருத்துவமனைக்கு தனிமைப்படுத்தலுக்காக கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர்.

இந்த புலம்பெயர் தொழிலாளர்கள் இந்தோனேசியாவின் Bengkulu, West Kalimantan, South Kalimantan, South Sulawesi, North Sulawesi, Jambi, Central Java,  Southeast Sulawesi, West Sumatra, SouthSumatra மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் 5 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More