Monday, May 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் தென்னாபிரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் தீ விபத்து!

தென்னாபிரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் தீ விபத்து!

1 minutes read

தென்னாபிரிக்க தலைநகர் கேப்டவுனில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Flames can be seen rising from the building

உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பெரிய தீப்பிழம்புகள் மற்றும் பெரும் புகை மூட்டம் வான் நோக்கி எழுந்ததுடன், தீ பரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்களும் விரைந்து செயற்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இன்றும் கண்டறியப்படாத நிலையில் பாதிப்படைந்தோர் விபரங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை.

தீ மூன்றாவது மாடி அலுவலகங்களில் தொடங்கி தேசிய சட்டமன்ற அறைக்கும் பரவியது என்று உள்ளூர் தீயணைப்பு சேவை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

தீயை கட்டுப்படுத்த 35 தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More