ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உக்ரேன் தலைநகர் கீவ் நகருக்கு வந்தபோது ரஷ்ய படைகள் ரொக்கெட் தாக்குதலை நடத்தியதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
2 நாட்களுக்கு முன் ரஷ்ய ஜனாதிபதி புட்டினை, மொஸ்கோவில், சந்தித்து பேசிய ஆன்டனியோ குட்டரெஸ் தற்போது உக்ரேன் வந்துள்ளார்.
தலைநகர் கீவில், ஜனாதிபதி செலன்ஸ்கி உடன் இணைந்து அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் போரை நிறுத்த தவறி விட்டதற்காக வருத்தம் தெரிவித்தார்.
அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், அங்கிருந்து 3.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்டிடங்கள் மீது ரஷ்ய படைகள் ரொக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நிகழ்த்தின.
2 வாரங்களாக கீவ் நகர் மீது எவ்வித தாக்குதலும் நிகழ்த்தப்படாத நிலையில், ஐ.நா பொதுச்செயலாளர் வந்துள்ள சமயத்தில் ரஷ்ய படைகள் தாக்குதல் நிகழ்த்தியது ஐ.நா அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஐ.நா-வை அவமதிக்கும் நோக்கில் ரஷ்யா இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளதாக ஜனாதிபதி செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.