Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஹெய்ட்டியில் படகு கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழப்பு

ஹெய்ட்டியில் படகு கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழப்பு

1 minutes read

ஹெய்ட்டியில் வன்முறை சம்பவங்கள் தலைவிரித்து ஆடுவதால் பலர் அந்நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறி வருகின்றனர்.

இதற்காக அவர்கள் சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் சென்று வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இரவு ஒரு படகில் பெண்கள், குழந்தைகள் உட்பட 60 பேர் மியாமி நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

பகாமா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த படகு கவிந்தது. இதனால் அதில் பயணம் செய்த அகதிகள் கடலுக்குள் மூழ்கினார்கள். சிலர் கடலில் தத்தளித்தபடி உயிருக்கு போராடினார்கள்.

இது பற்றி அறிந்த கடற்படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலரை அவர்கள் மீட்டனர்.

இந்த படகு விபத்தில் ஒரு கைக்குழந்தை, 12 பெண்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக ஹெய்ட்டியின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More