ரஸ்யாவில் பாடசாலைஒன்றின் மீது நபர் ஒருவர் மேற்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஜ்ஹெவ்ஸ்க் நகரில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்விகற்க்கும் பாடசாலையொன்றின் மீதே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் ஐந்து மாணவர்கள் உள்ளனர் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிசூடு இடம்பெற்ற கட்டிடத்திற்குள் பதற்றம் நிலவுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
வகுப்பறைகளில் இரத்தக்கறைகள் ஜன்னல்களில் துப்பாக்கி சூடுகள் இடம்பெற்றமைக்கான அடையாளங்களை காண்பிக்கும் படங்களும் வீடியோக்களும் வெளியாகின்றன.
மாணவர்கள் வகுப்பறைகளில் பதுங்கியிருப்பதை காண்பிக்கும் படங்களும் வெளியாகின்றன.
இரண்டு ஆசிரியர்களும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டுள்ளனர் மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாஜி சின்னம் பொறிக்கப்பட டீசேர்ட் அணிந்த நபர் ஒருவர் இரு கைத்துப்பாக்கிகளை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகின்றன