சீனாவின் வடக்கு உள் மங்கோலியா பகுதியில் நேற்றுப் புதன்கிழமை நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 50க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்று சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அலாஷான் லீகில் உள்ள சுரங்கத்தின் பெரும்பகுதி இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதுடன், மண்ணுக்குள் மக்கள் புதையுண்டுள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
06 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும், இன்னும் 53 பேர் காணாமல் போனவர்கள் பட்டியலில் இருப்பதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காணாமற்போனவர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு, சீன ஜனாதிபதி சி சின்பிங் (Xi Jinping) அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவ இடத்துக்கு சுமார் 500 மீட்புப் பணியாளர்கள் அனுப்பட்டுள்ளதுடன், இன்னும் 200 பேர் அங்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.