ஆப்கானிஸ்தானிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு எதிரான தாக்குதல்களை திட்டமிட்ட ஐஎஸ் இயக்கத்தின் சிரேஷ்ட தளபதி ஒருவரை தலிபான் படையினர் கொன்றுள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஐஎஸ் இயக்கத்தின் பிராந்திய புலனாய்வு மற்றும் செயற்பாட்டுப் பிரிவின் தலைவரான காரி ஃபத்தேஹ் என்பவரே கொல்லப்பட்டார் என தலிபான் அரசாங்கப் பேச்சாளர் ஸபிஹுல்லா முஜாஹித் திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.
தலைநகர் காபூலில் வெளிநாட்டுத் தூதரகங்கள், பள்ளிவாசல்கள் உட்பட பல இடங்கள் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் சூத்திரதாரி காரி ஃபத்தேஹ் எனவும் முஜாஹித் கூறியுள்ளார்.