அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகள் மீது பாலியல் புகார்கள் முன்வைக்கப்படுவது அங்கு வாடிக்கையான ஒன்று. தற்போது, இந்த பட்டியலில் டொனால்ட் டிரம்ப்பும் இணைந்திருக்கின்றார்.
3க்கும் மேற்பட்ட நடிகைகள் இவர்மீது பாலியல் புகார்களை பொதுவெளியிலேயே வெளிப்படுத்தி உள்ளனர். 10க்கும் அதிகமான பெண்கள், டிரம்ப் மீது பாலியல் புகார் தெரிவித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தனர்.
கடந்த 2017ஆம் ஆண்டுவரை டிரம்ப் மீது மொத்தம் 19 பெண்கள் பாலியல் புகார் அளித்திருந்த நிலையில்தான் ஆபாச பட நடிகைகளின் புகார்கள் வெளிவர தொடங்கின.
முதன்முதலாக, ஜெசிகா டிரேக் என்ற ஆபாச நடிகை, புகாரை முன்வைத்தார். “கடந்த 2006ம் ஆண்டு கலிபோர்னியாவில் ஓட்டல் அறையில் டிரம்ப் தன்னிடமும் மற்ற இரண்டு பெண்களிடமும் முறையற்ற விதத்தில் நடந்துகொண்டார்.
தன்னுடன் பார்ட்டிக்கு வந்தால் 10 ஆயிரம் டொலர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள என்னுடைய வீட்டிற்கு அவரின் விமானத்தில் செல்லலாம் என கூறினார்” இவ்வாறு ஜெசிகா கூறியிருந்தார்.
டிரம்ப் நடத்தை குறித்து தொடர்ந்து மோசமான தகவல்கள் வெளியாகி கொண்டே இருந்த நிலையில், அடுத்ததாக ஆபாச பட நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் ஒரு பகீர் புகாரை கிளப்பினார்.
அவர் வெளியிட்ட ‘புல் டிஸ்குளோசர்’ என்ற புத்தகத்தில், அப்போதைய ஜனாதிபதியாக இருந்த டிரம்ப்புடன் உறவு குறித்து விளக்கமாக குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 2006ல்டிரம்ப் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து இவ்வாறு நடந்து கொண்டதாக அந்த புத்தகத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டை எல்லாம் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தாலும், கடந்த 2016ம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தலில் அதன் தாக்கம் அதிகமாக எதிரொலிக்கவே செய்தது.
இதற்கு பிறகு, இந்த விவகாரம் தலைதூக்காமல் இருக்கவும், இதுகுறித்து பேசாமல் இருக்கவும் 1.30 லட்சம் அமெரிக்க டொலர் நடிகைக்கு வழங்கப்பட்டதாக இன்னொரு குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் தான், முன்னணி குடியரசுக் கட்சி வேட்பாளர் மற்றும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி அடுத்த வாரம் செவ்வாய்கிழமை கைது செய்யப்படுவார். போராட்டத்திற்கு தயாராகுங்கள்..” என்று ஒரு டுவீட்டையும் பதிவிட்டிருந்தார்.
தன்னுடைய பதிவில், “ஊழல் மற்றும் செல்வாக்கு மிக்க மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் இருந்து வந்த சட்டவிரோதமான கசிவுகள்” என்று டிரம்ப் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து கடந்த 2 நாட்களாகவே இந்த டுவிட்கள் பரபரப்பாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறன.
நடிகைக்கு 130,000 டொலர் செலுத்திய விவகாரத்தில்தான், டிரம்ப் கைது செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள டிரம்ப் சரணடைவார் என்று டிரம்பின் வழக்கறிஞர் கூறி உள்ளார். டிரம்ப் சொல்லியது இன்றைய தினம் (21) என்பதால், ஒருவேளை அவர் இன்று கைதாவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.