Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு அதிகாரிகளின் இறுதிச் சடங்கு அடுத்த வாரம்

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு அதிகாரிகளின் இறுதிச் சடங்கு அடுத்த வாரம்

1 minutes read

கடந்த வாரம் பணியின் போது சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு எட்மண்டன் அதிகாரிகளுக்கு ரெஜிமென்ட் இறுதிச் சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கனடா பொலிஸார் தெரிவித்தனர்.

35 வயதான டிராவிஸ் ஜோர்டான் மற்றும் 30 வயதான பிரட் ரியான் ஆகியோரின் இறுதிச் சடங்குகள் மார்ச் 27 அன்று ரோஜர்ஸ் பிளேஸில் நடைபெற உள்ளது.

கடந்த வியாழன் அதிகாலை வடமேற்கு அடுக்குமாடி குடியிருப்புக்கு குடும்ப தகராறு தொடர்பான புகார் குறித்த விசாரணைக்கு சென்ற கான்ஸ்டபிள்கள், 16 வயது சிறுவனால் பலமுறை சுடுப்பட்டு கொல்லப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

துப்பாக்கிக்காக ஏற்பட்ட போராட்டத்தின் போது சிறுவன் தனது தாயை சுட்டுக் காயப்படுத்தியதாகவும், பின்னர் தன்னைத்தானே சுட்டுக் கொன்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகளின் உடல்கள் மருத்துவ பரிசோதகர் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு செல்லப்பட உள்ளன.

கடந்த வாரம் சிறுவனின் 55 வயதுடைய தாய் 911 என்ற எண்ணுக்கு அழைத்ததாகவும், ஆனால் வன்முறை அச்சுறுத்தல் அல்லது சிறுவனிடம் துப்பாக்கி இருந்ததாக முன்கூட்டியே ஊகிக்கும் அளவுக்கு அங்கு எந்த அறிகுறியும் இல்லை என்று புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More