கொரோனா வைரஸ் தாக்கம் இன்னமும் தீர்மானிக்க முடியாத நோயாகவே இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் எந்தப் போக்கில் செல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள நாளாகலாம். எனினும், அதற்கு முன்ரே மேலும் பல பாதிப்புக்களை அது ஏற்படுத்தக் கூடும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
உலகளவில் கடந்த 28 நாள்களில் 23,000 க்கும் அதிகமானோர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதுடன், புதிதாக 3 மில்லியன் பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
PCR பரிசோதனைகள் குறைந்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை மிகப் பெரிது என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.