0
பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை என்று ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டுக்கு பின்னர், பிரதமர் புமியோ கிஷிடா பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்தும் எந்தத் திட்டமும் தன்னிடம் இல்லை என புமியோ கிஷிடா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.