இன்னமும் பழைய காலத்திலேயே இங்கிலாந்து இருப்பதாக சீனா சாடியுள்ளது.
தைவான் மீதான எவ்வகையான தாக்குதலும் உள்நாட்டிலும் உலக அளவிலும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்று, இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிலெவர்லி (James Cleverly) சீனாவை எச்சரித்திருந்தார்.
அதற்குப் பதிலளித்த சீனா, ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைப்பது குறித்து இங்கிலாந்தை எச்சரித்துள்ளதுடன், இங்கிலாந்து இன்னமும் பழைய காலத்திலேயே இருப்பதாக சாடியுள்ளது.
அத்துடன், உறவை மேம்படுத்தி, அமைதி, நிலைத்தன்மையை ஏற்படுத்தச் செயல்படும்படியும் இங்கிலாந்தை சீனா வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, தைவான் நீரிணையில் கடற்படை சுற்றுக்காவல் தேவை என்று ஐரோப்பிய உயர் பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளார். அது குறித்து உச்ச விழிப்பு நிலையில் இருப்பதாகவும் சீனா அறிக்கையிட்டுள்ளது.