ரோபோக்களை பயன்படுத்தி பல தீவிர வேலைகளை செய்து வரும் நிலையில் இப்போது இயற்கை மீறிய செயலை ஸ்பெயின் செய்துள்ளது.
“ஸ்பெர்ம் ரோபோ” மூலம் ஸ்பெயினில் பிளேஸ்டேஷன் 5 கன்ட்ரோலரைப் பயன்படுத்தி கருத்தரிக்கப்பட்ட குழந்தைகள் வெற்றிகரமாகப் பிறந்துள்ளன.
விந்தணுவை ஊசி மூலம் செலுத்தும் ரோபோக்களை பார்சிலோனா பொறியாளர்கள் மேம்படுத்தினர்.
அவை அமெரிக்காவின் நியூயார்க் நகர கிளினிக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அந்த ரோபோக்களைப் பயன்படுத்தி விந்தணு செலுத்தப்பட்டு உருவான முதல் 2 பெண் குழந்தைகள் எவ்வித சிக்கலுமின்றி பிறந்தன.
இதன் மூலம் செ யற்கை கருத்தரிப்பு முயற்சிக்கு பயன்படும் இன்-விட்ரோ ஃபெர்டிலைசேஷன் சிகிச்சையை மிகக் குறைந்த கட்டணத்தில் பெண்கள் பயன்படுத்த இயலும்.