Thursday, May 2, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா மெக்சிகோ எல்லையில் 1,500 இராணுவ வீரர்களை நிறுத்த அமெரிக்கா முடிவு

மெக்சிகோ எல்லையில் 1,500 இராணுவ வீரர்களை நிறுத்த அமெரிக்கா முடிவு

1 minutes read

மெக்சிகோ நாட்டு எல்லையில் தனது நாட்டின் 1,500 இராணுவ வீரர்களை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முடிவு செய்துள்ளார்.

குறித்த இராணுவ வீரர்கள், அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லைப் பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவிடுவார்கள் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 1,500 இராணுவ வீரர்கள் 90 நாட்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த, தரை சார்ந்த பாதுகாப்பை கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு, தரவுகளை பதிவேற்றுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள் என பென்டகன் செய்தி தொடர்பாளர் பேட் ரைடர் தெரிவித்துள்ளார்.

கைது உள்ளிட்ட சட்ட அமலாக்க நடவடிக்கைகளில் இந்த இராணுவ வீரர்கள் நேரடியாக பங்கெடுக்கமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா நாட்டுக்குள் மெக்சிகோ எல்லை வழியே அகதிகளாக புலம்பெயர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மெக்சிகோ நாட்டினர் அல்லாத நபர்களை மீண்டும் அந்நாட்டுக்கே திருப்பி அனுப்பும் பணியை அமெரிக்க வீரர்கள் செய்து வருகின்றனர்.

இதற்காக, முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் காலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக அனுப்பி வைக்கப்பட்ட 2,500 தேசிய பாதுகாவல் படையினருடன் இணைந்து, இந்தப் பணியை தற்போது செல்ல இருக்கிற இராணுவ வீரர்கள் மேற்கொள்வார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More