Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா மற்றுமொரு மொழியில் திருக்குறள்; நூலை வெளியிட்ட மோடி

மற்றுமொரு மொழியில் திருக்குறள்; நூலை வெளியிட்ட மோடி

0 minutes read

பப்புவா நியூ கினிவாவில் டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை, இந்தியப் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மோடி, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, கடந்த 19ஆம் திகதி அவர் ஜப்பான் சென்றார். இதன்போது, ஜி-7 உச்சி மாநாட்டிலும் அவர் பங்கேற்றார்.

இதன்பின்னர், பல்வேறு தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி குறித்து கலந்துரையாடினார்.

ஜப்பான் நாட்டுக்கான பயணம் நிறைவடைந்த பின்னர் பிரதமர் மோடி, பப்புவா நியூ கினியாவுக்கு நேற்று புறப்பட்டார்.

அங்கு சென்ற மோடிக்கு அந்நாட்டின் விமான நிலையத்தில் அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டப் பிரதமர் ஜேம்ஸ் மரேப் அவரை நேரில் வரவேற்றார்.

இந்நிலையிலேயே, பப்புவா நியூ கினிவாவில் டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் மோடி அங்கு வெளியிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More