காடுகளை அழிப்பதற்கு எதிரான புதிய சட்டம், ஐரோப்பிய ஒன்றியத்தால் நடைமுறைப்படுத்தவுள்ளது.
எதிர்வரும் 2 ஆண்டுக்குள் இப்புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.
இந்தச் சட்டத்தை, மலேசியாவும் இந்தோனேசியாவும் எதிர்க்கவுள்ளதாக தெரியவருகின்றது.
இந்த வாரம் பிரசல்ஸில் நடக்கவுள்ள கூட்டத்தில் குறித்த இரு நாட்டு அமைச்சர்களும் தங்கள் நிலைப்பாட்டை எடுத்துக் கூறவுள்ளனர்.
“புதிய சட்டம் பாரபட்சமானது; அது செம்பனை எண்ணெய் ஏற்றுமதிக்கு எதிரானது” என மலேசியாவும் இந்தோனேசியாவும் கூறி வருகின்றன.
அது சிறு விவசாயிகளைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் விநியோகத் தொடரிலிருந்து அவர்களை விலக்கிவிடும் என்றும் மலேசியாவும் இந்தோனேசியாவும் கூறி வருகின்றன.