வடக்கு லண்டனில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள் மீது கார் மோதியதில் 60 வயது நபர் உயிரிழந்தார்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.50 மணியளவில் எட்மண்டனில் உள்ள ஏ 406 ஏஞ்சல் சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில், பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மூன்று பேர் மீது கார் மோதியதாக ஸ்காட்லாந்து யார்டு செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அத்துடன், 60 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, காயமடைந்த மேலும் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.