உகாண்டா படுகொலையுடன் தொடர்புடையோர் கைது செய்யப்பட்டனர். உகாண்டாவில் சமகாலத்தில் நடைபெற்ற படுகொலை சம்பவம் பலரது மனதை உலுக்கியது எனலாம். கிழக்கு ஆபிரிக்க நாடான உகாண்டா இங்கிலாந்திடமிருந்து 1962 அக்டோபர் 9 அன்று சுதந்திரம் பெற்றது. இது ஒரு ஒற்றை நாடாளுமன்ற குடியரசு ஆகும்.காங்கோ எல்லையில் உள்ள ஒரு பள்ளியில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் 38 மாணவர்கள் உட்பட குறைந்தது 41 பேர் கொல்லப்பட்டனர்.
இங்கே சமீபத்திய ஆண்டுகளில் அரசுகள் பலவீனமாக தோன்றும் நிலையில் வட ஆபிரிக்கா முதல் சோமாலியா வரை கண்டம் முழுவதும் இஸ்லாமிய மற்றும் தீவிரவாத வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன.
இந்த பயங்கர வாத சம்பவத்துடன் தொடர்புடைய 20 நபர்கள் தற்போது கைதுசெய்யப்பட்டனர்.இந்த நபர்கள் இதை போன்று பல சம்பவங்களை செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவர்களை கொடுமை செய்து கொள்ளும் அளவுக்கு இவர்களது பிரிவினைவாதம் மோசமான நிலையில் உள்ளது எனலாம்.