சீனாவின் குவாங்டோங் மாநிலத்தின் லியான்சியாங் நகரில் உள்ள பாலர் பாடசாலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர், ஒருவர் காயமடைந்தார்.
இத்தாக்குதல் இன்று (10 ) காலை சீன நேரப்படி 7.40 மணியளவில் நடத்தப்பட்டுள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆசிரியர், 2 பெற்றோர், 3 மாணவர்கள் ஆகியோர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் அடையாளங்கள், வயது, தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் ஆகியவற்றைப் பற்றி தகவல் எதுவும் வெளியாகவில்லை.
சம்பவத்தின் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் விசாரணை தொடர்வதாகவும் சீன அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக சீனாவில் பள்ளிகளைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.